JMH KALMUNAI

JMH KALMUNAI

JMH KALMUNAI

JMH KALMUNAI

Monday, November 24, 2014

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

 ஜாமிஆ மன்பயில் ஹிதாய அரபுக் கல்லூரி மாணவர்களும்  உஸ்தாதுமார்களும் வகுப்பறைகளில் 2014

அதிபர்   சங்கைக்குரிய மௌலவீ  அல் ஹாபிழ் அல் ஹாஜ் ஐ.எல் காதிர் மீராஷாஹிப் (நூரி) சம்பாந்துரை இலங்கை
  1. சங்கைக்குரிய மௌலவீ  எம். அன்வர்  பாசில்தகாபி மன்பயி
  2. சங்கைக்குரிய மௌலவீ   எம் முஸாதிக் அஸ்ஹரி பலாஹி
  3. சங்கைக்குரிய மௌலவீ  அல் ஹாபிழ் ஜெ.ஏ.எம் வலீத் கௌதி
  4. சங்கைக்குரிய மௌலவீ  எச்.எம்.எம் யுசுப் முஸ்தபீ
  5. சங்கைக்குரிய மௌலவீ  அல்ஹாபிழ்  எம்.றியாஸ் அல்தாபீ
  6. சங்கைக்குரிய மௌலவீ எம்.அப்துர் றஹீம் நுழாரீ
சங்கைக்குரிய மௌலவீ

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka


Sunday, November 9, 2014

விஞ்ஞானத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

நோய் குணப்படும் மருத்துவக்கலை ஒரிரவில் உருவாக்கப்படவில்லை.அது ஆயிரம் ஆயிரம் பங்களிப்பாளர்களின் முயற்ச்சியின் விளைவாக உருவான உச்ச அடைவு மட்டமாகும். இம் முயற்சிகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே  ஆரம்பமாகிவிட்டன.இது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலை முறைக்கும் ஒரு நாகரிகத்திலிருந்த இன்னுமென்றுக்கும் கையளிக்கப்பட்டது.

இஸ்லாத்திற்கு முன்பிருந்தே வைத்திய முறை நடை முறையிலிருந்தது. மருத்துவத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் ஹிப்போக்கிரட்ஸ் போன்றவர்களால் மகத்தான பங்களிப்பாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவரின் பெயர் பரவலாகப் பிரபல்யமான சத்தியப்பிரமாணம் என்ற ஆவணத்துடன் தொடர்புபட்டிருந்து.அவரின் “அல்கமியோன் “என்ற நூல் கிரோக்க இலக்கியத்தின் ஆரம்பகர்த்தாவாக இருக்கக்கூடும்.

மூளைக்கும் புலன் அங்கங்களுக்கு மிடையேயுள்ள தொடர்புகளை விருத்தியாக்குதல் என்பதே அவரின் காத்திரமான பங்களிப்பாகும்.மனதின் அங்கமே மூளை,அது உணர்ச்சிகளை அறிவதற்கு மட்டுமல்லாமல்,
சிந்தனை,ஞாபகசக்தி என்பவற்றிக்குப் பொறுப்பானதாகும் உள்ளது. 

வரலாற்றில் அதிஉயர் விஞ்ஞானி,தத்துவஞானியாகக் கருதப்பட்ட அரிஸ் டொட்டில்,அல்கமியோன், உடன்பாடக் காணப்படவில்லை.அவர் உணர்ச்சிகளின் மையப்பகுதி மூளை அல்ல. இதயமே என நம்பினர்.

கி.பி 711 இல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்கு 80 வருடங்களின் பின்னர் முஸ்லிம்கள் ஜரோப்பாவை ஊடறுத்து ஸ்பெயின் அன்டலூசியாவை ஆட்சி புரிந்தனர். 

அங்கு அவர்கள்  700 வருடங்ககுக்கு மேலாகத் தங்கியிருந்தனர்.இஸ்லாமியப் பேரரசு மேற்கில் அத்திலாந்திக் சமூகத்திருந்து கிழக்கில் சீனாவின் எல்லை வரை வியாபித்திருந்தது. இஸ்லாத்தின் போதனைகள்,கற்றலின் முக்கியத்துவம், அழிவுகளைத்தடுத்தல்,தனியாள் சுகாதாரம்,சுத்தம் என்பவற்றை உக்கப்படுத்துதல் ஒழுக்கத்தைக் கண்ணியப்படுத்துதல் ஏனைய மதங்களுடனான தாராள மனப்பான்மை போன்ற விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.

இஸ்லாமிய விஞ்ஞானமானது ஆரம்பித்ததிலிருந்தே பௌதிக சூழலை மட்டும் அடிப்படையாகக் கருதவில்லை.மாறாக தான் வாழும் சமூகத்தில் ஓர் ஆத்மீக வாதியாக மனிதனை கருதுகிறது.

முதலாம் நிலை
7ஆம் 9ஆம் நூற்றாண்டுகளுக்கிடையேயுள்ள முதல் நிலை
இது அந்நிய நூற்றாண்டுகளுக்கிடையேயுள்ள அரபியில் மொழி பெயர்க்கும் காலம்.முஸ்லிம் விஞ்ஞானிகள் பொதுவாகச் சிறப்பான நூல்களை பாதுகாத்து வைப்பதில் ஆர்வமுடையவர்களாகக்காணப்படுகின்றனர்.

இரண்டாம் நிலை
9 ஆம் 13 ஆம் நிலை நூற்றாண்டுகளுக்கிடையேயான இரண்டாம் நிலைமை. .இது முதலாவது நிலையில் பெற்றுக்கொண்டவற்றை கட்டியெழுப்பும் நிலை மருத்துவத்தில் புதிய அத்தியாயங்களை தோற்றுவித்த முன்னணித் தலைவர்களாகிய முஸ்லிம் மருத்துவர்களின் நேர்மையானதும் சிறப்பானதுமான பங்களிப்பைக்காட்டும் நிலை.இது ஐரோப்பாவிற்கும் உலகின் ஏனைய நாடுகளு்கும் அறிவை வழங்கிய காலம்

மூன்றாம் நிலை
13 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்திய நிலை - மருத்துவமும் ஏனைய விஞ்ஞானத்தின் கிளைகளும் பின் தங்கியதும் மந்தமானதுமான நிலை.இதுதான் மேற்குலகின் கை ஒங்கிய நிலை.

தொடரும்............

(By:அபு இஸ்ஸா )

விஞ்ஞானத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு


Monday, November 3, 2014

விஷேட மார்க்க சொற்பொழிவு

இமாம் ஸெய்யிதுஷ் ஷூஹதா ஸெய்யிதுனா ஹூஸைன் ரழியல்லாஹூ அன்ஹூ அன்னவர்களின் மனாகிப் மஜ்லிசும் விஷேட மார்க்க சொற்பொழிவும்

இடம்  - புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி
காலம் – 04-11-2014 செய்வாய்க் கிழமை
நேரம் – காலை 10 மணி
தலைப்பு – பெருமானாரும் பேரர் ஹூஸைனின் பெறுமையும்
வளவாளர் – சங்கைக்குரிய மௌலவி அல் ஹாஜ் இப்றாஹீம் அஹ்மத் அஸீஸி ரப்பானி

அதிபர் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி புத்தளம்

விஷேட மார்க்க சொற்பொழிவு


இமாமுனா ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்

இன்று 03-11-2014 இஷாஃ தொழுகையின் பின் கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாய அரபுக் கலாசாலையில் புனித முஹர்றம் ஆஷூரா தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஜாமிஆவில் இருக்கும் மனாருல் ஹூதா பள்ளிவாயலில் புனித ஹஸன் ஹூஸைன் மெளலீத் ஓதப்பட்டு விஷேட துஆ பிரார்தனையும் சிறப்பாக நடை பெற்றது.இந் நிகழ்வில் மாணவர்களும் உஸ்தாதுமார்களும் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.



ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்

ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்

ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்






Friday, October 31, 2014

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

‘ஸம் ஸம்’ தண்ணீரின் பிறிதொரு அற்புதம்தான் தாகத்தையும் பசியையும் போக்கக்கூடிய திருப்திகரமான இயலுமையாகும். நபி (ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் கூறினார். “இஸ்லாத்துக்கு முன்னர் இந்தத் தண்ணீர் சப்பாஹ் அளிப்பது திருப்திகரமானது” என அழைக்கப்பட்டது என்று.


அது அவருடைய குடும்பத்தைப் போஷித்து வளர்க்க உள்Zடாகவும் உதவியாகவும் அமைந்திருந்தது. இஸ்லாத்துக்குப் பின்னர் இந்தப் பலம் பொருந்திய நீர் தாகத்தைத் தணியச் செய்து வயிற்றை நிரம்பச் செய்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “பூமியிலுள்ள மிகச் சிறந்த தண்ணீர் ஸம் ஸம் நீராகும். அது ஒருவகையான உணவாகவும் நோய் நிவாரணியாகவும் அமைந்துள்ளது என்று.

முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பிற்கேற்ப, அபூதர் அலி கிப்பாரீ (தோழர் சஹாபீ) குறிப்பிட்டதாவது, தான் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மக்காவுக்கு வந்தபோது ஒரு மாதம் பூராவும் ஸம் ஸம் நீர் அருந்தி தாகம் தீர்த்தது மாத்திரமன்றி, அந்த ஸம் ஸம் நீரால் தான் வாழ்ந்ததாகவும் அறிவித்துள்ளார்கள். மிக அண்மைக் காலமாகிய கடைசி ஒரு சில தசாப்தங்களில் விஞ்ஞானிகள் ஸம் ஸம் தண்ணீரின் சில மாதிரிகளை ஒன்று சேர்த்து அதில் அதிகமான கல்சியம் உள்ளதென்றும் அது சிறப்புத் தன்மையுள்ள ஆரோக்கியமான தண்ணீர் என்றும் கண்டுபிடித்தனர். இரண்டு அற்புதங்கள் உண்டு.

ஸம் ஸம் நீர் உடனடியாக மீள் நிரப்பப்படுவதும் அல்லாஹ் நிகரில்லாத ஸம் ஸம் கிணற்றுக்கு மேலதிகமாகக் கொண்டு வந்து ஊற்றாததும் அன்றி உலகமே அதில் மூழ்காததுமாகும். ஸம் ஸம் என்பதன் மொழிபெயர்ப்பு (ஹாஜரா (அலை) அவர்களால்) நில்! நில்! என்பதே அதன் பொருளாகும்.
பாணந்துறை
http://thinakaran.lk/2014/09/26/?fn=r1409262
செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு
Add caption

பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் Prof:Maurice Bucaille ன் உறுதியான கருத்தும்.

பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் Prof:Maurice

1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.

இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.

தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார்.

பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது.

உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார்.

அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே

என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லைஎன்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான்.

அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வுஎனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம் புகழ்ளுக்குரிய அர்ரஹ்மான்
அல்ஹம்து லில்லாஹ்...


(Abus Izza Evr)

Thursday, October 30, 2014

உலகின் நறுமணமிக்க மலர்கள்


உலகின் நறுமணமிக்க மலர்கள்

இல்லாதிருந்த இப்பிரபஞ்சங்களையும் பஞ்சபூதங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்லவன் அல்லாஹ் அவற்றையெல்லாம் அழித்துவிட்டு மீண்டும் படைக்க ஆற்றல்கொண்டவனாக இருக்கிறான். அத்தகு சர்வ வல்லமையும் கொண்ட அல்லாஹ் மாதங்கள் தொடர்பில் பின்வருமாறு கூறுகின்றான். வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி அம்மாதங்களில் நீங்கள் தங்களுக்கு தீங்கிழைத்து விடாதீர்கள். அல்குர்ஆன் 9:36

நபி முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இது பற்றிக் கூறுகையில், வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும் என்றுரைத்திருக்கிறார்கள் புகாரி.

ஆங்கில மற்றும் அரபு மாதங்கள் பன்னிரெண்டாக இருக்கிறது. சூரிய ஓட்டத்தைக் கணித்து ஆங்கில மாதங்களும் சந்திர ஓட்டத்தினைக் கணித்து அறபு மாதங்களும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மனிதன் தற்பொழுது கண்டுபிடித்திருக்கின்றான். இது மனிதனின் ஏற்பாடல்ல என்பதையும் மனிதன் ஏற்றிருக்கின்றான். ஆனால் வானங்கள் பூமிகளையும் மாதங்களின் எண்ணிக்கை உட்பட அனைத்தையும் படைத்தவன் நான் அன்றி வேறில்லை என வாதிடும் அல்லாஹ்வை கடவுளாக ஏற்றுக் கொண்டு அவன் ஒருவனையே வணங்குவதற்குப் பதிலாக இப்பிரபஞ்சங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றதென்ற ஆய்வில் மனிதன் காலத்தையும் நேரத்தையும் கழித்துக் கொண்டிருக்கின்றான்.

சந்திர ஓட்டத்தில் சுழன்று மலரும் சன்மார்க்க மாதங்களின் முதல்வன் முஹர்ரத்தினை அல்லாஹ்வின் பேருதவியினால் இம்முறையும் வரவேற்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. அல்ஹம் துலில்லாஹ் நபிலான நோன்புகளை எந்த மாதத்தில் வேண்டுமானாலும் நோற்றுக் கொள்ள முடியும். என்றாலும் அல்லாஹ்வின் மாதம் என்றழைக்கப்படும் புனித முஹர்ரம் மாத்தில் நோன்பு நோற்பதற்கு தனிச் சிறப்பிருக்கிறது. ரமழானுக்குப் பிறகு இம்மாதத்தில் நோன்பு நோற்பதற்கு தனிச் சிறப்பிருக்கிறது. ரமழானுக்குப் பிறகு இம்மாதத்தில் நோன்பு வைப்பதை சிறந்ததென்று நபியுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இம்மாதத்தின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார்கள். 

எனவே இஸ்லாமியர்களான நாம் ஒன்பதாவது நாளையும் சேர்த்து நோன்பு நோற்பது ஸ¤ன்னத்தான கருமமாக இருக்கிறது. அதனடிப்படையில் எதிர்வரும் 3,4 ம் திகதிகளில் இவ்வருட முஹர்ரம் மாத பிறை 09,10 க்குரிய ஸ¤ன்னத்தான நோன்புகளை நோற்பதற்கு அல்லாஹ் தெளபீக் செய்வானாக! இத்தினங்கள் மறவாது நினைவு கூரப்பட வேண்டும் என்பதற்கு இவை போதிய சான்றுகளாக இருக்கிறது.

ஆஷ¥ரா என்னும் சொல் ஹிப்ர் மொழிச் சொல்லாகும். அதாவது பத்தாவது நாள் என்பது அதன் அர்த்தமாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது. யூதர்களின் திஷ்ரி மாதமும் அரபிகளின் முஹர்ரம் மாதமும் இணையாக வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாக இருக்கிறது. அதற்காக இஸ்லாமியர்கள் யூத முங்லிம்கள் என்று அழைப்பதில்லை. அத்துடன் புனித முஹர்ரம் மாதத்தில் பேசப்படுகின்ற மிக முக்கிய நிகழ்வுகளில் ஹழ்ரத் ஸெய்யிதுனா ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் தியாக நிகழ்வும் ஒன்றாக வரலாற்றில் பதிவேறியிருக்கிறது.
ஒரு தடவை உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் இல்லத்திலிருந்து புறப்பட்டு அருமை மகளார் பெண்கள் தலைவி ஸெய்யிததுனா ஃபாத்திமா அலைஹஸ்ஸலாம் அவர்களின் வீட்டை நோக்கி அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சென்று கொண்டிருந்த போது ஹழ்ரத் ஹுஸைன் ரழையல்லாஹு அன்ஹு அவர்கள் அழும் ஓசையைக் கேட்டார்கள். அப்பொழுது அவர் அழுவது எனக்கு துன்பமளிக்கிறது என்பதை அறியமாட்டீரா என வினவினார்கள் தபரானி.
இன்னுமொரு தடவை தாகத்தினால் அழுது கொண்டிருந்த பேரப் பிள்ளை களின் தாகம் தீர்ப்பதற்காக தனது முபாரக்கான நாவினை அவ்விருவரின் வாயில் வைத்து உறிஞ்சக்கொடுத்து அழுகையை நிறுத்தினார்கள். தபரானீ, மஜ்மஉஸ் ஸவாயித். தன் பேரப் பிள்ளைகள் சாதாரணமாக அழுவதைக் கூட பெருமானார் விரும்பவில்லை யென்பது இதிலிருந்து விளங்க முடிகிறது. அன்னை ஃபாத்திமாவின் பேச்சும் நடையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பேச்சுக்கும் நடைக்கும் நிகராகத் திகழ்ந்ததுபோன்று இரு பேரர்களின் உருவ அமைப்பு பெருமானாரின் பரிசுத்த தோற்றம் போன்றிருந்திருக்கிறது. தன்னை நேசிப்பவர்கள் இவ்விருவரையும் நேசித்தாகவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். பெருமானாரின் பரிசுத்த மேனியில் உருண்டு பிரண்டு விளையாடும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். சுவனபதி வாலிபத் தலைவர், உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள் என நபியவர்களால் போற்றிப் புகழப்பட்டவர்கள்.

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தனது இரு பேரக் குழந்தைளையும் அதிகமதிகம் நேசித்திருக்கிறார்கள். அத்தோடு அவ்விருவரையும் நேசிக்குமாறு பிறர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். அவ்விருவரையும் நேசிப்பவர்களை தானும் நேசிப்பதாக வாக்குறுதியளித்திருக்கிறார்கள். அவ்விருவரை மட்டுமன்றி அவர்களது பெற்றோர்களையும் நேசிக்கும் விடயத்தில் தீனுல் இஸ்லாம் கூடிய கவனம் செலுத்தியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. எனவே பரிசுத்த இக்குடும்பத்தினரை இஸ்லாம் கூறும் விதத்தில் நேசிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அருமை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான ஹழ்ரத் ஸெய்யிதுஷ் ஷ¤ஹதா இமாம் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை அல்லது அன்னவரின் குடும்பத்தினரை நேசிப்பது ஈமானிய அம்ஷம் எனக்கூறிக் கொண்டு ஏனைய எந்தவொரு நபித் தோழரையோ அல்லது அண்ணலாரின் குடும்ப அங்கத்தவர்களான மனைவிமார்களையோ தூற்றுவதற்கு இடமளிக்க முடியாது. அண்ணலாரின் அருமைத் தோழர்க ளைக் குறைகூற விமர்சிக்க மார்க்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானவர்களுக்கு அல்லாஹ்வும் அவனது அமரர்களும் சாமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பன்னிரெண்டு மாதங்களில் துல் கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்கள் வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து அல்லாஹ்விடம் சங்கைமிக்கதாக ஏற்படுத்தப்பட்டதற்கு இதுதான் காரணம் என்றுகூற மனிதனுக்கு ஆற்றல் இல்லையென்ற போதிலும் அல்லாஹ்வின் தீர்க்கதரிசிகளான நபிமார்கள் ரசூல்மார்கள் அவ்வாறே விலாயத்தின் தலை வாசலான வலிமார்கள் இச்சிறப்பான மாதங்களில் நினைவுகூரப்படுவதுடன் அவ்வாறானவர்களின் விரோதிகளான அல்லாஹ்வின் விரோதிகள் தூற்றப்படுவதையும் காண முடிகிறது.

துல்கஃதா துல் ஹிஜ்ஜா மாதங்களில் நபிமார்களான இப்ராஹீம், இஸ்மாயில், ஹாஜா அலைஹிமுஸ்ஸலாம் நினைவு கூறப்பட்டு அவர்கள் போற்றிப் புகழப்படுவதுடன் நிம்ரூத் எனும் கொடிய அரக்கன் சாமிடப்படுவதையும் பார்க்கின்றோம் அவ்வாறே இங்லாமிய புது வருட முஹர்ரம் மாதத்தில் நபியுல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் நினைவு கூரப்படுவதுடன் கொடிய அரக்கன், பிர்அவ்ன் சாமிடப்படுகின்றான். அத்துடன் விலாயத்தின் தலை வாயிலான அஹ்லு பைத்துக்களும் நினைவு கூரப்பட்டு அதன் எதிரிகள் தீக்கிரையாக்கப்படுவதையும் காண முடிகிறது. எனவே நபிமார்கள் ரசூல்மார்கள் வலிமார்களுடன் தொடர்புடைய கால நேரங்கள் உலகம் அழியும் வரை மனிதன் வணக்க வழிபாடுகள் வாயிலாக இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள் மீறப்படாத அமைப்பில் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கின்றான்.
அபுத் தூபா ஏறாவூர்
அல் ஜாமி அத்துல் அkஸிய்யா அரபுக் கல்லூரி
விருதோடை


ahlul baith  Rasoolullah_